டெல்லியில் புதிய நடவடிக்கை!

May 3, 2024 - 02:05
 6
டெல்லியில் புதிய நடவடிக்கை!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைதை கண்டித்து ஆம் ஆத்மி சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கியுள்ளது.

தற்போது, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் கெஜ்ரிவால் ரத்து செய்யப்பட்ட டெல்லி கலால் கொள்கையுடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் கடந்த மார்ச் 21ல் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

கெஜ்ரிவாலின் கைதை கண்டித்து டெல்லி மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், மே7ம் தேதி வரை திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கெஜ்ரிவாலுக்கு மக்கள் தங்களின் செய்திகளை எழுதுவதற்காக லஜ்பத் நகரில் இரண்டு வெள்ளை பலகைகள் வைக்கப்பட்ட்டுள்ளன.

டெல்லி மக்கள் முதல்வரை எவ்வளவு நேசிக்கிறார்கள் என்பதைக் காட்டும் வகையில் நகரின் பல்வேறு பகுதிகளில் கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் என்று ஆத் ஆத்மி ஜங்புரா எம் எல் ஏ பிரவீன் குமார் கூறினார்.

இந்த பிரச்சாரத்தை லப்ஜப் நகரிலிருந்து தொடங்கி பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் செல்வோம். இந்த கையெழுத்துக்களைச் சேகரித்து பாஜகவுக்கு அனுப்புவோம் என கூறியுள்ளார்.