3வது முறையாக களம் கானும் மோடி

May 14, 2024 - 22:50
 7
3வது முறையாக களம் கானும் மோடி

உத்திர பிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடி 3வது முறையாக வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார்.

நாடு முழுவதும் 18வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. உத்திரப் பிரதேசம் மாநிலம் வாரணாசியில் வருகிற ஜூன் 1ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் வாரனாசியில் 3வது முறையாக களம் கானும் மோடி வேட்புமனுத்தாக்கலுக்கு முன்பு கங்கை நதிக்கரையில் நடந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார்.

இதனைத்தொடர்ந்து காலபைரவர் கோவிலில் பூஜை செய்துவிட்டு பின்னர் அமித்ஷா, ராஜ்நாத் சிங், யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோருடன் சென்று பிரதமர் மோடி வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

பிரதமரின் வேட்புமனுத்தாக்கலை முன்னிட்டு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாடன், பாமக தலைவர் அன்புமனி ராமதாஸ் உள்ளிட்டோரும் வாரனாசி சென்றுள்ளனர்.

இந்நிலையில் வேட்புமனுத்தாக்கலுக்கு பின்னர் மோடியை சந்தித்து தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.

நாடு முழுவதிலும் இருந்து 21 முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.