ஜெயலலிதா இல்லனா இல்ல – அண்ணாமலை

May 25, 2024 - 01:31
 6
ஜெயலலிதா இல்லனா இல்ல – அண்ணாமலை

தென் மாநிலத்தில் 3வது பெரிய கட்சியாக பாஜக உருவெடுக்கும் என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

நாளை டெல்லியில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை பாஜக நிரப்பி வருகிறது. நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலக்க வாக்குப்பங்கை பெற்று  தென் மாநிலத்தில் 3வது பெரிய கட்சியாக உருவெடுக்கும். அதிமுக இந்துத்துவா சித்தாந்தத்தில் இருந்து விலகிச் செல்வதால் அதை நிரப்ப பாஜகவுக்கு வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. 2014ம் ஆண்டுக்கு முன்புவரை ஒரு இந்து வாக்காளரின் இயல்பான தேர்வு அதிமுக வாகத்தான் இருந்தது. ஜெயலலிதா தனது இந்து அடையாளத்தை வெளிப்படையாக காட்டினார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு ஆதரவு தெரிவிப்பதற்கும், மதமாற்ற தடைச்சட்டத்தை அமல்படுத்துவதற்கும் நாட்டிலேயே முதல் அரசியல்வாதியாக நின்றார்.

ஆனால், 2016ம் ஆண்டில் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு இந்துத்துவா கொள்கைகளில் இருந்து அதிமுக விலகி விட்டது. தமிழகத்தில் கோவில்களை காக்கும் ஒரு கட்சியை இந்துக்கள் தேடுகிறார்கள் என்றால் அது இயல்பாகவே பாரதீய ஜனதாவாsகத்தான் இருக்கும். ஏனென்றால் ஜெயலலிதாவிடம் இருந்து அதிமுக வெகு தொலைவுக்கு விலகி விட்டது. தமிழகத்தை பொறுத்தவரை 2 காரணங்கள் தான் பாரதீய ஜனதாவை பெரிய இடத்துக்கு கொண்டு சென்றது ஒன்று 2014ல் மோடி ஆட்சிக்கு வந்தது மற்றொன்று ஜெயலலிதா மறைந்தது என கூறியுள்ளார்.