பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையின் பின்னணி?

Jul 6, 2024 - 22:57
 6
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையின் பின்னணி?

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது தமிழ்நாடு முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் அரசியல் தலைவர்கள் பலறும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

யார் இந்த ஆம்ஸ்டார்ங்? இவருடைய பின்னணி என்ன? இவர் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

சென்னை பெரம்பூர் வேணுகோபால சுவாமி கோயில் தெருவில் வசித்து வந்தவர் ஆம்ஸ்ட்ராங்.

சட்டக் கல்வியை முடித்து வழக்கறிஞராக பணியாற்றி வந்த இவர். 2000-ம் ஆண்டு முதல் தீவிர அரசியலில் ஈடுபடத் தொடங்கினார்.

பின்னர், பூவை மூர்த்தியின் தலைமையை ஏற்று, புரட்சி பாரதம் கட்சியில் இணைந்தார்.

பூவை மூர்த்தியின் மறைவுக்கு பிறகு, அக்கட்சியில் இருந்து விலகி தனித்து செயல்பட்டு வந்தார். 2006-ம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாநகராட்சி தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்த அவர், 2007-ம் ஆண்டு அக்கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

2011 சட்டப்பேரவை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில், மு..ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்று, அனைவரின் கவனத்தையும் பெற்றார். பின்னர் 2016 சட்டப்பேரவை தேர்தலிலும் போட்டியிட்டார்.

இதனிடையே, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியில் நீண்ட காலமாக மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்,

சட்டப்படிப்பு முடித்த ஆரம்ப காலத்தில் அடிதடி, மோதல் உட்பட பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கி பின்னர், நீதிமன்றம் சென்று தன் மீதான அனைத்து வழக்குகளிலும் இருந்து விடுதலையானார்.  

இருப்பினும் பழைய குற்ற வழக்குகளில் இவரால் பாதிப்புக்கு உள்ளானவர்கள் வெவ்வேறு குழுக்களாக செயல்பட்டு அவரை பழிவாங்க காத்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், ஆம்ஸ்ட்ராங் மிகவும் செல்வாக்கு மிக்கவராக வலம்வந்தார். 24 மணி நேரமும் இவரை சுற்றியுள்ளவர்கள் பாதுகாப்பு அளித்து  வந்ததாகவும் தெரிகிறது. 

ஆனால், அவரால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சிலர் மற்றும் தொழில் போட்டியாளர்களிடம் இருந்து அவருக்கு அச்சுறுத்தல் இருந்துகொண்டே இருந்ததாக தெரிகிறது. இதனால், அவர் பெரும்பாலும் வெளியே வருவதை குறைத்துக் கொண்டார். மிக முக்கியமான நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே ஆதரவாளர்களின் பாதுகாப்போடு சென்று வந்துள்ளார்.

இந்நிலையில், தான் எதிர்பாராத விதமாக மர்ம நபர்களால் வெள்ளிக்கிழமை மாலை கொடூரமான முறையில் ஆம்ஸ்ட்ராங் கொலைசெய்யப்பட்டுள்லார்.

இவர், “தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு கல்வி பயில, தொழில் தொடங்க, அடிப்படை தேவைகளை நிறைவு செய்ய மிகுந்த சேவை மனப்பான்மையோடு பாடுபட்டவர் . இதன் மூலம் அவர்களது நன்மதிப்பையும் பெற்று வந்தார்என அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலைச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், 10 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மேலும், சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளை சேகரித்து போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். அசம்பாவிதச் சம்பவங்களைத் தவிர்க்க பெரம்பூர், செம்பியம் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்இந்த கொலை சம்பவத்தைத் தொடர்ந்து, சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் 8 பேர் சரணடைந்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.