கிராம மக்களுக்கு தமிழக அரசு உத்தரவு!

Aug 8, 2024 - 23:35
Sep 9, 2024 - 20:17
 12
கிராம மக்களுக்கு தமிழக அரசு உத்தரவு!

ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று, அனைத்து கிராம ஊராட்சிகளிலும், கிராம சபை கூட்டம் நடத்த அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சுதந்திர தினத்தன்று காலை 11 மணியளவில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்றும், இதற்கான இடம், நேரத்தை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

கிராம சபை கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய பொருட்கள் குறித்தும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தூய்மையான குடிநீர் விநியோகம், இணைய வழி வரி செலுத்தும் சேவை, இணைய வழி மனை பிரிவு மற்றும் கட்டிட அனுமதி வழங்குதல், சுய சான்றிதழ் அடிப்படையில் குடியிருப்பு கட்டிடங்களுக்கு அனுமதி வழங்குதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு எளிமைப்படுத்தப்பட்ட ஊராட்சி கணக்கு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், தூய்மை பாரத இயக்கம், ஜல்ஜீவன் இயக்கம் உள்ளிட்டவை தொடர்பாகவும், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், பொது கட்டடங்களில் குழாய் இணைப்புகள் மூலம் குடிநீர் விநியோகம் ஆகியவை குறித்தும் ஆலோசனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.