எம்.எல்.ஏ க்கள் செயலால் அதிர்ந்த சபாநாயகர்!

Aug 23, 2024 - 22:20
 4
எம்.எல்.ஏ க்கள் செயலால் அதிர்ந்த சபாநாயகர்!

ஒடிசா சட்டசபையில் பிஜீ ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகளின் உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கஞ்சம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 2 பேர் உயிரிழந்த நிலையில், 13 பேர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒடிசா கலால் துறை அமைச்சர் ப்ரித்விராஜ் ஹர்சவர்தனை பதவி விலக வலியுறுத்தி எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.

சீக்கியாவில் சட்டவிரோத மதுமான வியாபாரம் குறித்து வருவாய் கோட்டாட்சி ஆணையரால் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

அதே போல் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகியவற்றால் அரசியல் நோக்கத்திற்காக மத்திய அரசு பயன்படுத்துகிறது என காங்கிரஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இதனால் இரு தரப்பினரிடையே கூச்சல் அதிகரித்ததால் சட்டசபை தொடர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் சபாநாயகர் சட்டசபையை ஒத்திவைத்துள்ளார். நேற்றும் இதே போல் எதிர்கட்சி உறுப்பினர்கள் அமலியில் ஈடுபட்டதால் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.

இதனால் ஒடிசா சட்டசபை நீடிக்க முடியாமல் 2 முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.