மணிமேகலை vs பிரியங்கா சண்டைக்கு இது தான் காரணமா?

தனியார் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக இருக்கக்கூடிய நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி! இந்த நிகழ்ச்சியில் 4 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் தற்போது 5வது சீசன் நடந்து கொண்டிருக்கிறது.

Sep 17, 2024 - 01:13
 20
மணிமேகலை vs பிரியங்கா சண்டைக்கு இது தான் காரணமா?

மணிமேகலை vs பிரியங்கா சண்டைக்கு இது தான் காரணமா?

தனியார் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக இருக்கக்கூடிய நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி! இந்த நிகழ்ச்சியில் 4 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் தற்போது 5வது சீசன் நடந்து கொண்டிருக்கிறது.

CWC 5 நிகழ்ச்சியில் தொடர்ந்து வெளியேறிய நபர்கள்!

இந்த 5 சீசனை தொடங்கியதிலிருந்தே பல பிரச்சினைகள் நடந்து கொண்டிருக்கிறது. முதலில் குக் வித் கோமாளியின் 4 சீசன்களை வெற்றிகரமாக நடத்தி வந்த நிறுவனம் திடீரென்று இதிலிருந்து விலகியது. இதனைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியிலிருந்து வெங்கடேஷ் பட் வெளியேறினார். இப்படி முக்கியமான நபர்கள் வெளியேறிய நிலையில்தான் இந்த 5வது சீசனை தொடங்கினார்கள். இந்த சீசன் தொடங்கி கொஞ்ச நாட்களிலேயே மக்கள் அனைவரும் நாங்கள் பார்த்து ரசித்த அந்த 4 சீசனை போல் இந்த சீசன் இல்லை என அவர்களின் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் இந்த சீசனில் இருந்து மணிமேகலையும் வெளியேறியுள்ளார். கடந்த 4 சீசன்களில் கோமாளியாக இருந்து மக்களை மகிழ வைத்த மணிமேகலை தற்போது 5வது சீசனில் தொகுப்பாளினியாக ( Anchor) பங்கேற்றார். இந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறிவிட்டதாக ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார். இந்த விஷயம் ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

மணிமேகலை CWC 5 நிகழ்ச்சியிலிருந்து விலகியதன் காரணம்!

மேலும் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகியதற்கான காரணத்தை மணிமேகலை அவருடைய youtube சேனலில் வீடியோ மூலம் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவருடைய வேலையை செய்யவிடாமல் சில இடையூறுகள் இருப்பதாகவும், இதற்குக் காரணம் அந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற ஒரு பெண் தொகுப்பாளினி தான் என்று பிரியங்காவை மறைமுகமாக கூறியிருந்தார். மேலும், இந்த சீசன் முழுவதும் அந்தப் பெண் தொகுப்பாளினியின் ஆதிக்கம் அதிகமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். அவர் இந்த நிகழ்ச்சிக்கு Cook - ஆக தான் வந்தார், ஆனால் அதை மறந்துவிட்டு என்னுடைய Anchor வேலையை செய்யவிடாமல் இடையூறு செய்து வந்தார். இது பற்றி நான் அவரிடம் நேரடியாகவே பேசினேன். ஆனால் அதை அவர் கொஞ்சம் கூட புரிந்து கொள்ளவில்லை. அதனால் அடுத்ததாக இந்த நிகழ்ச்சியை நடத்தும் நிறுவனத்திடம் கூறினேன். ஆனால் அவர்கள் அந்தப் பெண் தொகுப்பாளினி மிகவும் பிரபலமானவர். அதனால் அவரிடம் பகைத்துக் கொள்ளாமல் , அவரிடம் கொஞ்சம் இறங்கி போய் மன்னிப்பு கேட்டால் இன்னும் பல நிகழ்ச்சிகள் உங்களுக்கு கிடைக்கும். ஆனால் அவரை பகைத்துக் கொண்டால் உங்களுடைய மீடியா வாழ்க்கை வீணாகிவிடும் என்று கூறினார்கள் என்று மணிமேகலை தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மணிமேகலை அந்த நிறுவனத்திடம் "எனக்கு என்னுடைய சுயமரியாதை தான் முக்கியம், அதை விட்டுவிட்டு மற்றவர்களிடம் இறங்கி போவதால் எனக்கு எவ்வளவு பெரிய வாய்ப்பு கிடைத்தாலும் அது எனக்கு தேவையில்லை அதில் வரும் பணமும் எனக்கு தேவையில்லை " என கூறிவிட்டு அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறி விட்டேன் என மணிமேகலை அந்த வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ரசிகர்களும், பிரபலங்களும் மணிமேகலைக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.