இழுபறியிலும் பாஜக மீது குற்றச்சாட்டு!

Oct 8, 2024 - 19:58
 3
இழுபறியிலும் பாஜக மீது குற்றச்சாட்டு!

ஹரியானாவில் தொடர்ந்து 3வது முறையாக பாஜக ஆட்சியமைக்கும் என்று பாஜக எம்.பி. மோகன் லால் படோலி தெரிவித்துள்ளார். நயாப் சிங் சைனியே முதலமைச்சராக தொடர்வார் என்றும் பாஜக எம்.பி. மோகன் லால் படோலி கூறியுள்ளார்.

ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் பாஜககாங்கிரஸ் இடையே கடும் இழுபறி நீடித்து வரும் நிலையில்

ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிடுவதில் தேர்தல் ஆணையம் தாமதப்படுத்துவது ஏன்? என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பி உள்ளார். சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தேர்தல் ஆணையத்திற்கு பாஜக நெருக்கடி கொடுப்பதாக குற்றம் சாட்டிய அவர்,

மக்களவைத் தேர்தலைப் போன்றே ஹரியானா தேர்தலிலும் முறைகேடுகள் நடைபெறுகிறதா என ஜெய்ராம் ரமேஷ் சந்தேகம் எழுப்பியுள்ளார்.