சென்னைக்கு அபாயம் – விரைந்து வந்த வீரர்கள்

Oct 14, 2024 - 18:41
 1
சென்னைக்கு அபாயம் – விரைந்து வந்த வீரர்கள்

ரெட் அலர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து, நெல்லையில் இருந்து சென்னை விரைந்துள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெல்லையில் நிலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 குழுக்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளன. 

சென்னையில் ஏற்கனவே 3 குழுக்கள் உள்ள நிலையில் மேலும் 6 குழுக்கள் சென்னை வர வுள்ளதாக கூறப்படுகிறது.

இதனை தவிர்த்து திருச்சியில் 3 குழுக்கள், கோவையில் 3 குழுக்கள், மேட்டுபாளையத்தில் 3 குழுக்கள் என மொத்தம் 9 குழுக்களும் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

தற்போது தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையில் 18 குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.

மேலும், தமிழக அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகளின் உத்தரவின் அடிப்படையில் மழை பாதிப்புக்கான முன்னெச்சரிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.