முறைகேடு வழக்கில் ஈபிஎஸ் புதிய மனு…. ரூ. 1கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும்!
எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை

முறைகேடு வழக்கில் ஈபிஎஸ் புதிய மனு…. ரூ. 1கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும்!
ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி அறப்போர் இயக்கத்துக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார்.
தனது வாக்குமூலத்தை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்கக் கோரி எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை வைத்துள்ளார்.
இதன் முன்னதாக நெடுஞ்சாலை டெண்டர் ஒதுக்கீட்டில், முறைகேடு செய்துள்ளதாக எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அறப்போர் இயக்கம் புகார் அளித்திருந்தது.
இதனையடுத்து, அறப்போர் இயக்கம் தனக்கு எதிராக அவதூறு பரப்பி அவப்பெயர் ஏற்படுத்தியதாக கூறி மான நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் ஈபிஎஸ் மனு அளித்துள்ளார்.
ஈபிஎஸ் தொடர்ந்த மனுவுக்கு அறப்போர் இயக்கம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அறப்போர் இயக்கம் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி மன உளைச்சலை ஏற்படுத்திவிட்டதாக எடப்பாடி பழனிச்சாமி புகாரில் தெரிவித்துள்ளார்.
கடந்த 2016-21ம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் தஞ்சாவூர், சிவகங்கை, கோவை மாவட்டங்களின் நெடுஞ்சாலை டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்துள்ளதாக அறப்போர் இயக்கம் புகார் அளித்திருக்கிறது.