மாடு மேய்க்கும் சிறுவன் கூட இப்படி பேச மாட்டான்; பாமக பெயரை அன்புமணி பயன்படுத்தக் கூடாது!

பாமக கொடிக்கும் அன்புமணிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது

Oct 16, 2025 - 15:16
 8
மாடு மேய்க்கும் சிறுவன் கூட இப்படி பேச மாட்டான்; பாமக பெயரை அன்புமணி பயன்படுத்தக் கூடாது!

மாடு மேய்க்கும் சிறுவன் கூட இப்படி பேச மாட்டான்; பாமக பெயரை அன்புமணி பயன்படுத்தக் கூடாது!

ஐயாவுக்கு ஏதாவது ஆனால் சும்மா விடமாட்டேன், வேடிக்கை பார்க்க மாட்டேன் என பேசிய அன்புமணிக்கு ராமதாஸ் பதில் அளித்துள்ளார்.

அன்புமணி தனிகட்சி ஆரம்பித்து கொள்ள வேண்டும் அதுதான்  அன்புமணிக்கும் அவரை சுற்றி இருப்பவர்களுக்கும் நல்லது. 

படிக்காத மாடு மேய்க்கும் சிறுவன் கூட இப்படிபட்ட சொற்களை கொட்டி இருக்க மாட்டான் அன்புமணிக்கு தலைமை பண்பு இல்லை.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விரைவில் குணமடைய வேண்டுமென கட்சி தலைவர்கள் வாழ்த்து கூறியது மகிழ்ச்சியாக இருந்தது.

பாமக கட்சிக்கும் கொடிக்கும் அன்புமணிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது, அன்புமணி தனிகட்சி ஆரம்பித்து கொள்ள வேண்டும்.

புதிய கட்சி தொடங்கினால் பொறுப்புகள் தான் கிடைக்கும். சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி கிடைக்காது.  

பாமக கட்சி கொடி கட்சி பெயரை பயன்படுத்தாமல் தன்னுடைய பெயரின் தலைப்பெழுத்தினை மட்டுமே அன்புமணி பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

தனி மனித உழைப்பினால் 96 ஆராயிரம் கிராமங்களுக்கு சென்று காடுமேடு அலைந்து திரிந்து உருவாக்கப்பட்டது தான் பாமக எனவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.