ஆவினால் கொள்ளை அடிக்கும் திமுக… ஜிஎஸ்டி பலனை அனுபவிக்காத மக்கள்!
மக்களின் நலனுக்காக பாஜக பெரும் போராட்டத்தை முன்னெடுக்கும்
ஆவினால் கொள்ளை அடிக்கும் திமுக… ஜிஎஸ்டி பலனை அனுபவிக்காத மக்கள்!
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பிரதமர் மோடி கொண்டுவந்த ஜி.எஸ்.டி வரி சீர்திருத்தத்திற்கு இணங்க ஆவின் பொருட்களின் விலையை குறைக்காமல் இழுத்தடிக்கும் திமுக என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளனர்.
மக்கள் கண்டனக் குரல் எழும்பியதும் பண்டிகைக் கால போர்வையில் விலையைக் குறைப்பது போல நாடகமாடியது ஊரறிந்த விஷயம் தான்.
தற்போது அமைதியாக ஆவின் நெய் விலையை உயர்த்தி, மக்களின் நலனை உறிஞ்சும் தனது கோர முகத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது திமுக.
ஜி.எஸ்.டி 12% ல் இருந்து 5% குறைக்கப்பட்ட பின்னும் ரூ.656-க்கு விற்கப்படுவதற்கு பதில் அதே 700க்கு விற்கப்படுகிறது.
ஜி.எஸ்.டி சதவீதம் குறைந்தும் ஆவீன் பொருட்களின் விலையை குறைக்காமல் அதே விலை விற்பது மக்களின் நிதிச் சுமையை ஏற்றும் திமுக அரசின் அகங்காரம் கண்டனத்திற்குரியது.
நந்தினி, அமுல் போன்ற பிற மாநிலப் பால் கூட்டுறவு நிறுவனங்கள் புதிய வரிகளுக்கு ஏற்றவாறு 3 மாதங்களுக்கு முன்பே பால் பொருட்களின் விலையைக் குறைத்து விட்டன.
புதிய ஜி.எஸ்.டி சீர்திருத்தத்திற்கு இணங்க ஆவின் பொருட்களின் விலையை உடனடியாகக் குறைக்காவிடில் மக்களின் நலனுக்காகத் தமிழக பாஜக பெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
