சூடு பிடிக்கும் அரசியல் களம்!

Jul 13, 2024 - 20:22
Jul 13, 2024 - 20:29
 22
சூடு பிடிக்கும் அரசியல் களம்!

சூடு பிடிக்கும் அரசியல் களம்! 

விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?


விழுப்புரம்: கடந்த 2021ல் நடந்த சட்டசபை தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெற்ற நா.புகழேந்தி மரணமடைந்த நிலையில் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு கடந்த 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாஜக கூட்டணியில் பாமக சார்பில் வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் சி.அன்புமணி, சீமானின் நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா உள்பட மொத்தம் 29 பேர் வேட்பாளர்களாக போட்டியிட்டனர். திமுக, பாமக, நாம் தமிழர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த தேர்தலை அதிமுக புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 10ம் தேதி அமைதியாக நடந்து முடிந்த தேர்தலில் மொத்தம் 82.48 சதவீத வாக்குகள் பதிவானது. அதன்பிறகு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் இன்று விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலாவதாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிந்த நிலையில் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.