மோடி கடுமையாக விமர்சனம்! காங்கிரஸ் மரணித்துக் கொண்டிருக்கிறது!

May 3, 2024 - 02:08
 4
மோடி கடுமையாக விமர்சனம்! காங்கிரஸ் மரணித்துக் கொண்டிருக்கிறது!

பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் பவத் சவ்த்ரி, காங்கிரஸ் தலைவர் ராகுலை புகழ்ந்திருப்பதன் வாயிலாக, காங்கிரஸ் – பாகிஸ்தான் இடையேயான தொடர்பு வெளிச்சத்துக்கு வந்திருப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

குஜராத் மாநிலம் ஆனந்த் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் காங்கிரஸ் பலவீனமடைந்தபோதெல்லாம் பாகிஸ்தான் நாட்டுத் தலைவர்கள் பலரும் கட்சிக்காக பிரார்த்தனை செய்தனர், நாட்டின் பிரதமராக ராகுல் காந்தி வர வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள், ஆனால் காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்துவிட்டது,

அதில் ஒரு நகைச்சுவை என்னவென்றால், இங்கே காங்கிரஸ் மரணித்துக் கொண்டிருக்கிறது, அங்கே பாகிஸ்தான் அழுதுகொண்டிருக்கிறது. தற்போது பாகிஸ்தான் தலைவர்கள் காங்கிரஸ் கட்சிக்காக பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள்.

பாகிஸ்தான், ராகுல்காந்தியை நாட்டின் பிரதமராக்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு உள்ளது, காங்கிரஸ் கட்சி பாகிஸ்தானின் ரசிகர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். அதற்கேற்றார் போலவே, தற்போது பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் பேச்சின் மூலம், பாகிஸ்தான் – காங்கிரஸ் இடையேயான தொடர்பு முற்றிலும் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது என பேசியிருக்கிறார்.

குறிப்பாக காங்கிரஸ் அரசு பயங்கரவாதிகளுக்கு தகவல்களை வழங்கியது. ஆனால், மத்திய அரசு பயங்கரவாதிகளை கொன்றது எனவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.