BSNL 3 நாட்களுக்கு இலவச சேவை!

Aug 3, 2024 - 01:01
Sep 9, 2024 - 22:02
 10
BSNL 3 நாட்களுக்கு இலவச சேவை!

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் நிதி உதவிகள் மற்றும் ஆதரவுகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் வயநாடு  மற்றும் மலப்புரத்தின் நிலம்பூருக்கும் பி.எஸ்.என்.எல் தனது இலவச சேவையை அறிவித்துள்ளது.

இந்த பகுதிகளில் உள்ள அனைத்து பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களும், மூன்று நாட்களுக்கு இலவச அழைப்புகள், டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களைப் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்புகள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் ஆதரவின் ஒரு பகுதியாக இருக்கும் என பி.எஸ்.என்.எல் குறிப்பிட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்புப் பணியில் பிஎஸ்என்எல் நிறுவனமும் இணைந்து செயல்படுகிறது.

இந்த முகாமில் தங்கியிருந்த 600 பேருக்கு ரூ. 2500 மதிப்புள்ள செல்போன்களை மலப்புரத்தை சேர்ந்த இளைஞர்கள் இணைந்து இசவசமாக வழங்கிய நிலையில் தற்போது பி.எஸ்.என். எல் நிறுவனம் இந்த இலவச சேவை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.