அதிமுக நிர்வாகிகள் சாலையில் நாற்று நட்டு போராட்டம்!

Oct 7, 2024 - 23:45
 5
அதிமுக நிர்வாகிகள் சாலையில் நாற்று நட்டு போராட்டம்!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னவராவதியில் உள்ள அண்ணா சாலை பகுதியில் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்ற போது குழாய்கள் பாதிக்கப்பட்டு சாலைகளில் நீர் தேங்கி காணப்படுகிறது.

சமீபத்தில் பெய்த மழை காரணமாகவும் சாலையில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக காணப்படுகிறது.

இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதித்துள்ளனர். நீண்ட நாட்களாக இந்த சூழல் இருந்து வரும் நிலையில் இதுவரை எந்த நடவடிக்கையும் இது குறித்து மேற்கொள்ளப்படவில்லை என தெரிகிறது.

இதனையடுத்து, இவற்றை உடனடியாக சரி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து புதுக்கோட்டை அதிமுக தெற்கு மாவட்ட கழகம் சார்பில் நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது.

இதில் ஒன்றிய செயலாளர்கள் காசி.கண்ணப்பன் மற்றும் ஆலவயல் சரவணன், மாவட்ட கவுன்சிலர் குழிபிறை பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், இந்த போராட்டத்தில் திமுகவை எதிர்த்து  அதிமுகவினர் நாற்று நட்டு  நாகோஷங்கள் எழுப்பியவாறு போராட்டம் நடத்தினர்.

அதிமுக நிர்வாகிகள் நாட்டு நட்டு தங்களது கோரிக்கையை பதிவு செய்தனர்.