வீர நாயகர் அல் அஹமது – சிட்னி தாக்குதலை தடுப்பதில் சாதனை | Bondi Beach Hero
வீர நாயகர் அல் அஹமது – சிட்னி தாக்குதலை தடுப்பதில் சாதனை | Bondi Beach Hero
சிட்னியில் துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதியை வெறும் கைகளால் மடக்கிய அல் அஹமது ஆஸ்திரேலியாவின் நாயகர் என அந்நாட்டு பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவின் பாண்டை கடற்கரை பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கிச்சூடு யூதர்களை நோக்கி நடைபெற்றது. சம்பவத்தில் ஈடுபட்டவர் பாகிஸ்தானைச் சேர்ந்த தந்தை-மகன் என தெரியவந்தது.
பயங்கரவாதி மக்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியபோது, ஒரு வீர நாயகர் பின்னால் சென்று வெறும் கைகளால் அவரை சாமர்த்தியமாக மடக்கி பிடித்து தாக்குதலைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.
விசாரணையில், சிட்னியின் சதர்லேண்ட் பகுதியில் வணிக வளாகம் நடத்தி வரும் அல் அஹமது (40) என தெரியவந்தது. மேற்காசிய நாடான சிரியாவைச் சேர்ந்த அவரது குடும்பம் சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்துள்ளது என்பது தெரியவந்தது.
இவரின் இந்த செயல் பல பொதுமக்களின் உயிர்களை காப்பாற்றியது. சம்பவம் உடனடியாக ஊடகங்களில் பரவியது, சமூக ஊடகங்களில் நாயகரின் வீரத்துக்கு பெரும் பாராட்டுகள் வந்துள்ளன.
பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருக்கும் அல் அஹமதுவை நேரில் சந்தித்து, ஆஸ்திரோலியா பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அவரது நலம் விசாரித்தார். பிரதமர் அல் அஹமதுவின் தைரியம் மற்றும் செயல்திறனை பாராட்டினார்.
