உட்கட்சிப் பிரச்சனைகள் மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்துகிறது – ஜோதிமணி

காங்கிரஸ் அழிவின் பாதையில் செல்கிறது

Jan 2, 2026 - 17:25
 52
உட்கட்சிப் பிரச்சனைகள் மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்துகிறது – ஜோதிமணி

உட்கட்சிப் பிரச்சனைகள் மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்துகிறது – ஜோதிமணி

உட்கட்சி பிரச்சனைகளால் கட்சி கட்டுப்பாடற்று இருக்கிறது. ஒரு சிலரின் சுயநலத்தால் தமிழ்நாடு காங்கிரஸ் அழிவின் பாதையில் செல்கிறது என ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரசில் எந்தவித கட்டுப்பாடுமற்று தொடரும் உட்கட்சிப் பிரச்சனைகள் மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்துகிறது.

கரூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் நடக்கும் உட்கட்சி பிரச்சினைகள் குறித்து கடும் விமர்சனம் வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸில் எவ்வித கட்டுப்பாடும் இன்றி தொடரும் உட்கட்சிப் பிரச்சினைகள் மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்துகிறது.

ஒரு சிலரின் சுயநலத்திற்காக கட்சி கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் செல்கிறது.இதை உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் உணர்ந்து தடுத்து நிறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

எந்த அரசியல் கட்சியும் தனது நாடாளுமன்ற உறுப்பினரை தேர்தல் நேரத்தில் வாக்குச் சாவடி முகவர் பட்டியல் கொடுக்க விடாமல் முடக்க நினைக்காது. ஆனால் காங்கிரஸில் அது நடக்கிறது என்று ஜோதிமணி வேதனை தெரிவித்தார்.

கொள்கை நிலைப்பாடுகள், அரசியல் செயல்பாடுகள் நீர்த்துப் போகச் செய்யும் முயற்சிகள் நடப்பதாகவும், மக்கள் பிரச்சினைகளைப் பேசாமல் தவறான காரணங்களுக்காக கட்சி செய்திகளில் அடிபடுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

தமிழ்நாடு மதவாத, பிரிவினைவாத, வன்முறை சக்திகளிடம் இருந்து பேராபத்தை எதிர்கொண்டிருப்பதாகக் கூறிய ஜோதிமணி, காமராசர், பெரியார் போன்ற தலைவர்கள் கட்டிக் காத்த சமூக நீதி, சுயமரியாதை, மக்கள் நல அரசியலை குழிதோண்டிப் புதைக்க ஒரு கூட்டம் காத்திருக்கிறது. இந்தச் சூழலில் தேர்தலை கவனமாகக் கையாள வேண்டிய பொறுப்பு அனைத்துக் கட்சிகளுக்கும் உள்ளது என்று வலியுறுத்தினார்.