ஜியோ கட்டண உயர்வு....ஜூலை 3முதல் அமலுக்கு வருகிறது!

Jun 28, 2024 - 22:49
Sep 9, 2024 - 22:48
 6
ஜியோ கட்டண உயர்வு....ஜூலை 3முதல் அமலுக்கு வருகிறது!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நுகர்வோருக்கு சிறந்த சேவையை வழங்குவதற்காக, தனது 5ஜி மொபைல்களுக்கான புதிய திட்டங்களில், கட்டணங்களை உயர்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

அதன்படி, செல்போன் கட்டணமானது 12% முதல் 25% வரை உயர்த்தப்பட்டுள்ளது. ரூ. 155 ஆக இருந்த மாதக் கட்டணம் ரூ.189 ஆகவும், ரூ. 399 ஆக இருந்த கட்டணம் ரூ.449 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே போல் 28 நாட்களுக்கான 2ஜிபி திட்டத்திற்கான கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த கட்டண உயர்வானது ஜூலை 3ம் தேதியிலிருந்து அமலுக்கு வர உள்ளது.

மேலும், இது குறித்து பேசிய ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத் தலைவர் ஆகாஷ் எம்.அம்பானி,  புதிய திட்டங்களின் அறிமுகமானது, 5ஜி மற்றும் ஏ.ஐ தொழில்நுட்பத்தில் செய்யும் முதலீடு மூலம் நிலையான வளர்ச்சியை மேம்படுத்த முடியும் என கூறியுள்ளார். டிஜிட்டல் இந்தியாவின் முதுகெலும்பான ஜியோ, இதற்கு பங்களிப்பதில் பெருமிதம் கொள்கிறது. ஜியோ எப்போதும் நம் நாட்டிலும், வாடிக்கையாளர்களிடமும் முதலிடத்தில் உள்ளது. மேலும், இந்தியாவிற்காக தொடர்ந்து முதலீடு செய்து கொண்டே இருக்கும் என கூறியுள்ளார்.