பாகிஸ்தான் இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும்!

Jul 26, 2024 - 20:54
 9
பாகிஸ்தான் இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும்!

கார்கில் போர் வெற்றியின் 25வது நினைவு தினத்தில் பேசிய பிரதமர் மோடி,

கடந்த கால தவறுகளில் இருந்து பாகிஸ்தான் இன்னும் பாடம் கற்கவில்லை. தீய நோக்கத்துடன் இந்தியாவை அனுகினால், இந்திய ராணுவ வீரர்கள் தங்களின் முழு பலத்துடன் தீவிரவாதத்தை நசுக்குவார்கள். எதிரிகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும், தேசத்துக்காக செய்த தியாகங்கள் அழியாதவை என்பதை கார்கில் வெற்றி நமக்குச் சொல்கிறது. கடந்த காலங்களில் பாகிஸ்தான் தனது அனைத்து மோசமான முயற்சிகளிலும் தோல்வியே கண்டது ஆனாலும் தனது தவறுகளில் இருந்து பாகிஸ்தான் இன்னும் பாடம் கற்கவில்லை என பேசியுள்ளார். மேலும், ராணுவம் என்றால் அரசியல்வாதிகளுக்கு வணக்கம் செலுத்துவது, அணிவகுப்பு நடத்துவது என சிலர் நினைக்கிறார்கள், ஆனால்

எங்களைப் பொறுத்தவரை ராணுவம் என்பது 140 கோடி மக்களின் நம்பிக்கை என கூறினார்.