அரவிந்த் கெஜ்ரிவால் மனு தள்ளுபடி!

Aug 6, 2024 - 00:18
Sep 9, 2024 - 20:49
 8
அரவிந்த் கெஜ்ரிவால் மனு தள்ளுபடி!

டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடந்திருப்பதாக அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் மீது பணமோசடி உட்பட பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த 21ம் தேதி இரவு அமலாக்கத்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

 அவருடைய நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு கொண்டே சென்றது. அதேநேரம் டெல்லி மதுபான கொள்கையில் ஊழல் நடைபெற்றதாக கெஜ்ரிவால் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. மேலும் சிறையில் இருந்த கெஜ்ரிவாலை ஊழல் வழக்கில் ஜூன்26ம் தேதி சிபிஐ கைது செய்தது.

கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது, இதனிடையே, இந்த வழக்குகளில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து வந்தார்.

இதனையடுத்து, அமலாக்கத்துறை பதிவு செய்த பணமோசடி வழக்கில் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 20ம் தேதி டெல்லி கீழமை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த ஜாமீன் உத்தரவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவை ஜூலை 12ம் தேதி விசாரணை மேற்கொண்ட உச்சநீதிமன்றம், பண மோசடி  வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. ஆனால், சிபிஐ பதிவு செய்துள்ள ஊழல் வழக்கில் கெஜ்ரிவால் தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, சிபிஐ பதிவு செய்த ஊழல் வழக்கில் தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார்.

இதற்கான வழக்கு கடந்த மாதம் 17ம் தேதி விசாரணைக்கு வந்த போது நீதிபதி இந்த தீர்ப்பை ஒத்தி வைத்தார்.

அதன் பின்னர், சிபிஐ கைது நடவடிக்கையை எதிர்த்தும், இடைக்கால ஜாமீன் கோரிய மனு இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி கூறுகையில், எந்த ஒரு நியாயமான காரணமும் இல்லாமல் சிபிஐ கைது கைது செய்யப்பட்டதாக கூற முடியாது என கூறி இந்த மனுவை தள்ளுபடி செய்து வைத்தார்.

மேலும், ஜாமீன் தொடர்பாக விசாரணை நீதிமன்றத்தை நாடலாம் என நீதிபதி தெரிவித்துள்ளார்.