பொங்கலுக்கு பிறகு கூட்டணி அறிவிக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்
தொண்டர்கள் விரும்பும் கூட்டணியை அமைப்போம்
பொங்கலுக்கு பிறகு கூட்டணி அறிவிக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று மாவட்ட செயலாளர்களை சந்தித்து பேசினார்.
2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து விரிவாக தெரிவித்தார். அனைத்து கட்சிகளும் எங்களுக்கு தோழமைக் கட்சிகள் தான்.
அனைவரும் தேமுதிகவுடன் கூட்டணி வைக்க விரும்புகிறார்கள். மாவட்ட செயலாளர்களின் கருத்தைப் பொறுத்தே கூட்டணி அமையும்” என்று கூறினார்.
ராஜ்யசபா சீட் ஏற்கனவே பேசப்பட்டது என்றும், ஆனால் கவனம் சட்டமன்றத் தேர்தலை நோக்கியே உள்ளது என்றும் தெரிவித்தார்.பிரேமலதா மேலும் கூறுகையில், “தொண்டர்கள் விரும்பும் கூட்டணியை அமைப்போம்.
பொங்கலுக்கு பிறகு கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கும். இந்த நிமிடம் வரை எந்தக் கட்சியும் இறுதிக் கூட்டணி என்று அறிவிக்கவில்லை. கூட்டணியில் இருப்பவர்கள் வெளியேறலாம், புதியவர்கள் வரலாம்.
கூட்டணியில் இன்னும் நிறைய மாற்றங்கள் வரவுள்ளதாக தெரிவித்தார்.
இது தேமுதிகவின் கூட்டணி யுக்தியில் நெகிழ்வுத்தன்மை உள்ளதை வெளிப்படுத்துகிறது.
தேமுதிக எந்தக் கூட்டணிக்குச் செல்ல வேண்டும் என்று வாக்குப்பெட்டி வைத்து மாவட்டச் செயலாளர்களிடம் கருத்துக் கேட்கப்பட்டது.
ஒவ்வொரு வாக்குச்சீட்டையும் நானே எடுத்துப் பார்த்து, நிர்வாகிகளின் முடிவுப்படி கூட்டணி அமைப்பேன் என பிரேமலதா உறுதியளித்தார்.
