அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு .... ஆர்.எஸ்.எஸ் எடுத்த முடிவு!

பி.எல்.சந்தோஷ் உடன் அண்ணாமலை ஆலோசனை

Feb 10, 2026 - 16:01
 15
அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு .... ஆர்.எஸ்.எஸ் எடுத்த முடிவு!

அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு .... ஆர்.எஸ்.எஸ் எடுத்த முடிவு!     

வட தமிழ்நாட்டின் ஆர்.எஸ்.எஸ் மாநில செயற்குழு உறுப்பினராக கேசவ விநாயகம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு பாஜகவின் மாநில அமைப்புச் செயலர் பொறுப்பில் இருந்து வந்தவர் கேசவ விநாயகன்.

தமிழ்நாடு முழுவதும் சத்பாவ் (சமுதாய நல்லெண்ணம்) என்ற பொறுப்பில் செயல்படுவார் என ஆர்.எஸ்.எஸ் அறிவித்துள்ளது.  

ஆர்.எஸ்.எஸ் பொறுப்பில் இருந்த பிரசோப குமார், மாநில பாஜக அமைப்புச் செயலராக நியமனமிக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் பி.எல்.சந்தோஷ் உடன் அண்ணாமலை ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

இந்த ஆலோசனைக்கு பின்னர், அண்ணாமலைக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக பாஜக சக்தி கேந்திராவுக்கான பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது. மேலும், அமித் ஷா சேலம் வரும் நிலையில் வரும் 14ம் தேதி அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.