முன்னாள் பாஜக பிரமுகர் அஞ்சலை அதிரடி கைது!

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய  பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவர்  ஆம்ஸ்ட்ராங் கொலை!

Jul 20, 2024 - 18:57
Jul 20, 2024 - 19:02
 18
முன்னாள் பாஜக பிரமுகர் அஞ்சலை அதிரடி கைது!

முன்னாள் பாஜக பிரமுகர் அஞ்சலை அதிரடி கைது! 

கடந்த ஜூலை 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங், அவரது வீட்டின் அருகே படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

சம்பவத்தில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜூலை மாதம் 14 ம் தேதி விசாரணையின் போது தப்பிச்செல்ல முயன்றதாக கூறி, திருவேங்கடம் என்பவர் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தொடர்ச்சியாக பலர் இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், தமிழக பாஜகவின் முன்னாள் உறுப்பினர் அஞ்சலை தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளார். மீதமுள்ள 10 பேர் தற்பொழுது சென்னை பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டு தொடர்ச்சியாக விசாரணை நடந்துவரும் நிலையில், பல திடுக்கிடும் தகவல்கள் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வெளியாகி வந்தது.

திருவல்லிக்கேணி அதிமுக மேற்கு கழகப் பகுதி துணை செயலாளரான மலர்கொடி என்பவரும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் ஹரிஹரன் என்பவரும், திமுக பிரமுகர் ஒருவரின் மகனான சதீஷ் என்பவரும் கைது செய்யப்பட்டனர்.

தமிழக பாரதிய ஜனதா கட்சி வெளியிட்ட அறிக்கையில், வட சென்னை மேற்கு மாவட்டத்தின் மாவட்ட துணை தலைவராக பணியாற்றி வந்த அஞ்சலை, கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வந்ததால், கட்சியின் அனைத்து பொறுப்பில் இருந்தும் நீக்குவதாக கட்சி தகவல் தமிழக பாரதிய ஜனதா கட்சி அறிக்கை வெளியிட்டது