வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் | Election Commission

Oct 4, 2024 - 22:56
 8
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் | Election Commission

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் | Election Commission

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக நவம்பர் 09, 10, 23, 24 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அறிவித்துள்ளார். ஜனவரி 01, 2025 அன்று 18 வயதை அடையும் நபர்கள் புதிதாக வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார். புதிய வாக்காளர்கள், இந்த முகாம்களில் தங்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பங்களை எழுதி சமர்ப்பிக்கலாம். இந்த செயல்முறையை எளிதாக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, விண்ணப்பங்களை தயாராக வைத்திருக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, உத்தரவிட்டுள்ளார். இந்த சிறப்பு முகாம்கள் மூலம், அதிகமான புதிய வாக்காளர்கள் பதிவு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், ஜனநாயகத்தின் அடிப்படை உரிமையான வாக்குரிமையைப் பெறுவதற்கான வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்கும்.