கேரளாவில் பாதிக்கப்பட்டோருக்கு பணத்தை அள்ளிக்கொடுத்த Actors | Wayanad landslide donation

Aug 2, 2024 - 00:27
Aug 2, 2024 - 01:03
 36
கேரளாவில் பாதிக்கப்பட்டோருக்கு பணத்தை அள்ளிக்கொடுத்த Actors | Wayanad landslide donation

Wayanad landslide donation

 

வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக கேரள அரசு தீவிர மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில், தமிழ் திரையுலகின் பிரபல நடிகர், நடிகைகள் முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதியில் தாராளமாக நன்கொடை அளித்துள்ளனர்.

நடிகை ரஷ்மிகா மந்தனா ரூ. 10 லட்சமும், நடிகர் விக்ரம் ரூ. 20 லட்சமும், நடிகர் சூர்யா, அவரது மனைவி ஜோதிகா மற்றும் சூர்யாவின் சகோதரர் கார்த்தி ஆகியோர் ரூ. 50 லட்சமும் நன்கொடையாக வழங்கியுள்ளனர். மற்றும் பிரபல மலையாள நடிகை நிகிலா விமல் நிவாரண பொருட்களை வழங்கி பேரிடர் பணிகளில் தன்னால் முடிந்த உதவிகளை செய்தார்.